தேடுகிறேன்..
நான் நானாகிப் போகும் தருணங்களை..உருக்கும் வெயிலிலே விசிரச் சொன்னார்..
கொட்டும் மழையினில் குடை விரிக்கச் சொன்னார்..
பனியினில் நடந்தால் காதினை மறைக்கச் சொன்னார்..
தீ சுடுமென்றார்; முட்கள் குத்துமென்றார்;
இதை நல்லதென்றார் அதை தீயதென்றார்..,
ஒரு வழி கண்டு அது நல்லதென என்னை நடக்கச் சொன்னார்...
இதனை பிடிக்காதென்பார்.. அதனை பிடிக்குமென்பார்..
எதிர்பார்க்கும் வண்ணம் நடவாமல் போனால்..
குற்றமென்றே கொற்றமடிப்பார்..
கடந்து வந்த பாதை தனை திரும்பி பார்த்தேன்..
சொல் பேச்சு கேட்கும் நல்ல பிள்ளையாய்..
சுற்றோரின் வாக்குக்கு ஒரு வாழ்க்கையாய் .. கடந்திட்ட பயணங்கள்..
தேடுகிறேன்... நான் நானாகி போகும் தருணங்களை..
எங்கேனும் தெரிகிறதா? எனக்கான புதுவொரு அனுபவங்கள்..
கடந்த வழி நடந்து பார்த்தேன் எனக்காய்..
தீயினை தொட்டேன் - சுட்டது;
முட்களை பிடித்தேன் - வலித்தது;
மழையினில் நனைந்தேன் - சிலிர்த்தது;
வெயிலினை கடந்தேன் - வியர்த்தது;
நானாய் கண்டது; நானாய் கற்றது;
புதுவொரு அனுபவம் தந்தது..
வேலைக்கு மட்டுமா தேவை மன நிறைவு?
வாழ்கைக்கும் தேவை தேடலின் நிறைவு!!
விதி வழி நடந்தது போதும்...
இனியேனும் வாழ்கிறேன்..
நான் நானாகிப் போகும் தருணங்களை... !!!!
Really awesome lux oly u can think like this :-)
ReplyDelete