என் வாழ்க்கை கணக்கில்
நான் கடந்துவிட்டேன் சில பக்கங்கள்
சில பக்கங்கள் கோலாகலமாய்
சில பக்கங்கள் அலங்கோலமாய்!
கடைசி பக்கத்தின் முன் பக்கம் வரை
எல்லா பக்கத்தின் முன் பக்கமும்
பின் பக்கத்தை விட இன்பமாகவே உள்ளது;
பின் பக்கத்தினை நினைத்து முன் பக்கத்தை ஏற்பதா??
அதற்கும் முன் பக்கத்தினை நினைத்து
அப்பக்கதையும் வெறுப்பதா??
இன்றுவரை கடந்ததை சோகங்கலெனக் கொள்வதா??
அல்லது, இனிதான் பெருஞ்சோகமெனில்
இன்றுவரை அடைந்ததுதான் இன்பமெனக் கொள்வதா?
இன்பமே துன்பமெனக் கொள்ளத் தகுந்தேனெனில்
துன்பத்தை நரகமெனக் கொள்வேனா?
அவ்வாறெனில் நரகத்தை என்னென்று உரைப்பேன்??
இன்பமும் துன்பமும் கலந்தே தோன்றுமெனில்
இதுவரை தோன்றியிருக்கும் ஒருசில இன்பமும்
நான் துன்பமாய் கண்டதேனோ?
விதியின் விதிப்படி எல்லாமே துன்பமெனக்கொள்வது
என் மனமோ??
எனில், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று கூறுவது பிழையோ?
விதிப்படி நடப்பதே உலகெனில்
மனம் விதியின் போக்கில் செல்லும் அடிமையோ?
மனம் சொல்வதே நாம் செய்வோமெனில்
விதி என்பதே மாயமோ?
விதி என்பதே மாயமெனில்
மரணத்தின் கணக்குதான் என்ன??
மரணத்திற்கு மட்டும்தான் விதியெனில்
உலகில் வேற்றுமைகள் உருவாவதெப்படி?
வேற்றுமைக்கு காரணம் மனிதறேனில்
அவரின் உள்ளமும்தானே!!
மனசாட்சி எப்பொழுதும் சரியேயெனில்
அதை மீற வழி செய்வது விதிதானே!
பின், மரணத்தின் கணக்குமட்டும் விதி என்பதில்லையே!
என் உணர்வுகள் விதியினாலேயே வகுக்கப்பட்டதா?
என் உள்ளத்தில் இருந்துதான் எழுவதா?
அது விதிதானெனில் கள்வனை கள்வனாக்கியது விதியோ?
விதியின் பெயரால் பாவம் சேருமோ? அதில் அவனுக்கு பங்குமுண்டோ?
கள்வனாய் மாறுவது அவன் சித்தத்தாலெனில்
விதி என்பதுதான் என்ன??
என்னை சுற்றி மட்டுமே கேட்ட கேள்விகள்
பொதுவாய் பல கேள்விகளை எழுப்புகிறதே!
எந்தக் கேள்விக்கு விடையை தேட...??
விடையுள்ள கேள்விதான் எது?
எல்லா கேள்விகளுக்கும் விடையில்லையெனில்
கேள்விகள் மட்டும் எழுவது எவ்வாறு?
எல்லாக் கேள்விகளுக்கும் விடையுண்டெனில்
இக்கேள்விகளுக்கு விடை என்ன???
நான் கடந்துவிட்டேன் சில பக்கங்கள்
சில பக்கங்கள் கோலாகலமாய்
சில பக்கங்கள் அலங்கோலமாய்!
கடைசி பக்கத்தின் முன் பக்கம் வரை
எல்லா பக்கத்தின் முன் பக்கமும்
பின் பக்கத்தை விட இன்பமாகவே உள்ளது;
பின் பக்கத்தினை நினைத்து முன் பக்கத்தை ஏற்பதா??
அதற்கும் முன் பக்கத்தினை நினைத்து
அப்பக்கதையும் வெறுப்பதா??
இன்றுவரை கடந்ததை சோகங்கலெனக் கொள்வதா??
அல்லது, இனிதான் பெருஞ்சோகமெனில்
இன்றுவரை அடைந்ததுதான் இன்பமெனக் கொள்வதா?
இன்பமே துன்பமெனக் கொள்ளத் தகுந்தேனெனில்
துன்பத்தை நரகமெனக் கொள்வேனா?
அவ்வாறெனில் நரகத்தை என்னென்று உரைப்பேன்??
இன்பமும் துன்பமும் கலந்தே தோன்றுமெனில்
இதுவரை தோன்றியிருக்கும் ஒருசில இன்பமும்
நான் துன்பமாய் கண்டதேனோ?
விதியின் விதிப்படி எல்லாமே துன்பமெனக்கொள்வது
என் மனமோ??
எனில், மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று கூறுவது பிழையோ?
விதிப்படி நடப்பதே உலகெனில்
மனம் விதியின் போக்கில் செல்லும் அடிமையோ?
மனம் சொல்வதே நாம் செய்வோமெனில்
விதி என்பதே மாயமோ?
விதி என்பதே மாயமெனில்
மரணத்தின் கணக்குதான் என்ன??
மரணத்திற்கு மட்டும்தான் விதியெனில்
உலகில் வேற்றுமைகள் உருவாவதெப்படி?
வேற்றுமைக்கு காரணம் மனிதறேனில்
அவரின் உள்ளமும்தானே!!
மனசாட்சி எப்பொழுதும் சரியேயெனில்
அதை மீற வழி செய்வது விதிதானே!
பின், மரணத்தின் கணக்குமட்டும் விதி என்பதில்லையே!
என் உணர்வுகள் விதியினாலேயே வகுக்கப்பட்டதா?
என் உள்ளத்தில் இருந்துதான் எழுவதா?
அது விதிதானெனில் கள்வனை கள்வனாக்கியது விதியோ?
விதியின் பெயரால் பாவம் சேருமோ? அதில் அவனுக்கு பங்குமுண்டோ?
கள்வனாய் மாறுவது அவன் சித்தத்தாலெனில்
விதி என்பதுதான் என்ன??
என்னை சுற்றி மட்டுமே கேட்ட கேள்விகள்
பொதுவாய் பல கேள்விகளை எழுப்புகிறதே!
எந்தக் கேள்விக்கு விடையை தேட...??
விடையுள்ள கேள்விதான் எது?
எல்லா கேள்விகளுக்கும் விடையில்லையெனில்
கேள்விகள் மட்டும் எழுவது எவ்வாறு?
எல்லாக் கேள்விகளுக்கும் விடையுண்டெனில்
இக்கேள்விகளுக்கு விடை என்ன???