Saturday, 28 April 2012

உயர்கனவு !!

இரு விழி துளிகளில்..
ஒரு இசை பயணம்...

பிச்சை பாத்திரம் கைகளிலே...
விரட்டும் பசியோ கண்களிலே..
உணவிட்டுப் போவார் நான் வாழ்ந்திடவே!!

உயிருடன் நடப்பதுவே வாழ்வெனில் உணவிட்டுப் போங்கள்!
சுய நினைவின்றி அசைவின்றி படுத்தோர் கணக்கில் நானும் என்றாக..
கனவின்றி வழியின்றி இருந்தும், சிகிச்சைக்காக..

நல்லறிவும் உள்ளமும் மன விரிவும் வாழ்வின் உயிரெனில்..
என் கனவிற்கும் வாழ்விற்கும் வழி சொல்லிப் போங்கள்!

பிறந்த வீதியில் நிமிர்ந்த கனவுடன்..
ஒளிரும் வாழ்வினை நோக்கி...
என் மூத்தோர் கேட்டறியாத கல்வியை..
நான் தேர்ந்தரிய கேட்கிறேன்..
         சிறு பிச்சை...

இரு விழி துளிகள் சிந்த இசைக்கும் வெற்றுப் பாத்திரம்!
வேண்டுவது உயிர் உணவல்ல.. உயர் கனவு - உயர்க்கல்வி!!

பாத்திரம் நிரம்ப அழகுற முடிவுறும் இசைப்பயணம்..
வெறுமையை நிரப்பும் முடிவும் உம் கையில்!!

இது ஒரு தனி மனித கனவல்ல!!
ஒரு சந்ததியின் வாழ்வியல் மாற்றத்தின் அடிப்படை!!!

1 comment:

  1. very touching.. பிறந்த வீதியில் நிமிர்ந்த கனவுடன்..
    ஒளிரும் வாழ்வினை நோக்கி...
    என் மூத்தோர் கேட்டறியாத கல்வியை..
    நான் தேர்ந்தரிய கேட்கிறேன்

    nice poem again..

    ReplyDelete