Monday, 14 January 2013

மாலை மழை!!


மாலை இளங்காற்றினிலே...
சாலை செல்லும் பாதையிலே..
வாசம் தந்த சோலையிலே..
மலர்ந்தும் மலராத பூச்செடிகளிடை...
ஊஞ்சல் ஆடிடும் வெண்ணிலவே!!

சிற்றோடை சலசலக்க..,
பூங்காற்று மெய்சிலிர்க்க..,
சின்ன குயில்கள் கீதமிசைக்க..,
வண்ண மயில்கள் பரதம் கற்க,
பூரிப்பில் ஆழ்ந்திருக்கும் தேயாத வெண்ணிலவே!!

மஞ்சள் போர்த்த விண்ணினிலே;
துகில் போன்ற முகிலினிலெ;
சேர்த்து சேர்த்து வைத்த செல்வம்..,
உன்னைக் காண பூமியிலே..!

செல்வம் கண்ட பெண்ணிலவே..,
துள்ளியது என் கண்ணினிலே..,
மண் தொட்ட மழை சொர்க்கம்..,
உன்மனதில் ஏற்பட்ட பரவசம்..
ஆஹா..! இது ஒரு புதுரசம்!!